சிம்புவால் கமலுக்கு ஏற்பட்ட பிரச்சனை.? என்ன செய்ய காத்திருக்கின்றாரோ தெரியவில்லையே.?

நடிகர் கமல் நடிப்பில் அடுத்தபடியாக திரையில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2. இதற்கான படகு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் கமல் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படம் தற்பொழுது ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

அது என்ன காரணம் என்றால் சிம்பு தன்னுடைய உடல் மாற்றத்திற்கு பிறகு நடித்து வரும் திரைப்படங்களில் அனைத்து வெற்றி படங்களாக தான் இருந்து வருகின்றது. அதன் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் கொடுத்து வருகின்றார்.

அதன் அடிப்படையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிம்பு 48வது திரைப்படம் உருவாக இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றார்கள்.

அதற்கு காரணம் என்னவென்றால் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் தான் கொரோனா குமார். இந்த திரைப்படத்திற்கு ஆர்வம் காட்டாத சிம்பு தற்போது லண்டனுக்கு சென்று விட்டதா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.

மேலும், இந்த திரைப்படத்தில் நடித்து கொடுத்த பிறகுதான் கமல் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இல்லை என்றால் இந்த பிரச்சனையை வேறு மாதிரி கொண்டு சென்று போய்விடுவார்கள் என்று இப்பொழுது சிம்புவுக்கு

பெரிய ஒரு சிக்கலாக இருந்து வருகின்றது ஆனா இதைப் பற்றி எதுவும் கவலைப்படாமல் நடிகர் சிம்பு அடுத்த கட்ட வேலைகளை லண்டனில் செய்து வருகின்ற. அவர் திரும்பி இங்கு வந்த பிறகுதான் இந்த பிரச்சனை பெரியதாக வெடிக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *