கோவா பாடகியுடன் நெருக்கம்…! ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்திற்கு இது தான் காரணமா…? இணையத்தில் கசிந்த தகவல்…!

ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியினர் பிரிவிற்கு கோவா பாடகியொருவர் தான் காரணம் என பத்திரிகையாளர் பேசியது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜெயம் ரவி – ஆர்த்தி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு

அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.Brother படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து சர்ச்சை பாரியளவில் வெடித்து கொண்டிருக்கிறது. மாறாக ஜெயம் ரவி சென்ற கோவா பயணம் குறித்து ஏகப்பட்ட சலசலப்புகள் வெளியாகி வருகின்றது.அதாவது கோவா சென்ற போது,“ ஜெயம் ரவியின் காரில் பாடகி ஒருவர் இருந்தாராம். பெங்களூரை சேர்ந்தவராம். ஏற்கனவே திருமணமானவர்.

இந்த பாடகி தமிழ் படங்களிலும், ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார். ஆன்மீக மன வளர்ச்சியாளராகவும் வலம் வருகிறாராம். ஜெயம் ரவியுடன் நட்புடன் பழகி வந்த பாடகி தற்போது நெருக்கமாக இருக்கிறார். இது கூட அவர்களின் விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாம்…” என பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டியொன்றில் பேசியிருக்கிறார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் செய்தி பார்த்த பலர், “ இது முற்றிலும் வதந்தியாகும் அவர் அப்படியான நபர் அல்ல…” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *