கையில் கட்டு போட்டுக்கொண்டு ஆக்ரோஷமாக பேசும் சூரி…! இவருக்கு என்ன ஆனது என்று தெரியுமா …? சமூக வலைதளத்தில் வெளியாகி வரும் வைரல் வீடியோ …!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக நகைச்சுவை நடிகர்கள் பலரும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அப்படி ஹீரோவாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று விடுகிறது. அந்த வகையில் நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் காமெடி ஹீரோவாக தான் நடித்து வந்தார். அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது இதனை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் விடுதலை இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.அதே போல் சூரி நடிப்பில் கருடன் திரைப்படம் விரைவில் வர இருக்கிறது

இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார் சமுத்திரகனி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் கதையை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் எழுதுகிறார் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். துரை செந்தில்குமார் ஏற்கனவே சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் இந்த திரைப்படம் ஆக்ஷன் பாணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது படத்திற்கு யுவன்சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார் படத்தை வருகின்ற

மார்ச் மாதம் வெளியிட இருக்கிறது படக்குழு இந்த நிலையில் படத்தின் டைட்டில் கிலிம்ஸ் வீடியோவை பட குழு இன்று வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது, இந்த நிலையில் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது இதில் சூரி கையில் கட்டு போட்டுக்கொண்டு ஒரு நீளமான டயலாக்கை ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *