கல்யாணத்துக்கு பிறகு கூடுதல் கவர்ச்சி! குட்டை உடையில்…! நீச்சல்குள புகைப்படங்களை வெளியிட்ட மஞ்சிமா மோகன்…!

நடிகை மஞ்சிமா மோகன், திருமணத்திற்கு பின்னர்… நீச்சல் குளத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக மாறியவர் மஞ்சிமா மோகன். தன்னுடைய கொழுக்கு… மொழுக்கு அழகால் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.பிரபல நடிகர் கார்த்தியின் மகன், கௌதம் கார்த்திக்கு ஜோடியாக ‘தேவராட்டம்’ படத்தில் நடித்த போது, மஞ்சிமா மோகன் மற்றும் கெளதம் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது.

பல வருடங்கள் தங்களுடைய காதலை மூடி மறைந்த இந்த ஜோடி, பின்னர் வெளிப்படையாக காதலிப்பதை அறிவித்தனர். இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு, மிகவும் பிரமாண்டமாக இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் நடந்து முடிந்த நிலையில், மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு முன்பு நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடித்து முடித்தார். திருமணத்திற்கு பின்னர் எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை. மேலும் அவ்வப்போது, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், நீச்சல் குளத்தில் தன்னுடைய தோழியுடன் மஞ்சிமா மோகன் குட்டை உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு பிறகு தான் மஞ்சிமா கூடுதல் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிடுவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.திருமணத்தின் போதும்… திருமணத்திற்கு பிறகும் கொஞ்சம் உடல் எடை கூடி காணப்பட்ட மஞ்சிமா மோகன், தற்போது தீவிர ஒர்க் அவுட் செய்து, உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *