கண்டத வைரல் ஆக்குறத விட இதை வைரல் ஆக்குங்க- பிக்பாஸ் புகழ் ரச்சிதா போட்ட அதிரடி பதிவு…! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சில் ரசிகர்கள் …!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடம் பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் சீரியல் நடிகை ரச்சிதா.ரச்சிதா மகாலட்சுமி ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார். கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமான ரச்சிதா கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் . இதன் பிறகு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் தான் .இந்த சீரியல் இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து நாச்சியார்புறம் ,

நாம் இருவர் நமக்கு இருவர் 2 ,இது சொல்ல மறந்த கதை போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரச்சிதா . ஆனால் திருமணமாகி 8 வருடங்கள் கழித்து இருவரும் பிரிந்து விட்டனர். இப்படி இருக்கும் நிலையில் தினேஷை பிரிந்தவுடன் புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார், பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் பக்கம் வந்த இவர் இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து சீரியல்கள் நடித்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

தேபோல் உப்பு கருவாடு, மெய் நிகரே, ஃபயர் போன்ற தமிழ் படங்களிலும் சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதற்கு இடையில் ரச்சிதா-தினேஷ் விவாகரத்து பிரச்சனையும் ஒருபக்கம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நடிகை மகாலட்சுமி ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.கையில் துப்பாக்கியுடன், காவல்துறை கெட்டப்பில் ஆவேசமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு அடுத்த தமிழ் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாக இருப்பதாக ரச்சிதா அறிவித்துள்ளார். அதோடு கண்டதை எல்லாம் வைரல் ஆக்குறதை விட இதை ஆக்குங்க என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *