ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் ஓரினச்சேர்க்கை குறித்து நீலிமா ராணி கருத்து…! ரசிகர்கள் பெரும் ஷாக்…!

சீரியல் சினிமா என பிஸியாக நடித்த வரும் நடிகையான நீலிமா ராணி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் சமீப காலமாக பெண்கள் தங்களை விட வயதில் குறைந்த ஆண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்..! இது அதிகமாக நடந்து வருகிறது. ஆண்களும் தங்களை விட வயதில் அதிகமான பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை கேட்ட அடுத்த நொடியே சற்றும் யோசிக்காமல் தற்போது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டாலே

ஓ.கே என்ற நிலைக்கு வந்து விட்டோம். உலகம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கட்டத்திற்கு மாறி கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் பையனும் பொண்ணும் திருமணம் செய்து கொள்வது பற்றி எல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் பெரிய விஷயமா பேசிட்டு இருக்கீங்க..ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறோம். உலகமே வேறு ஒரு தளத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் இன்னும் 80களில் உள்ள ஆள் போல

சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்ட தொகுப்பாளினியை பங்கம் செய்திருக்கிறார். நீலிமா ராணியின் இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத தொகுப்பாளினி ஒரு நிமிடத்தில் என்னை பூமர் ஆக்கிவிட்டீர்களே.. என்று புலம்பி இருக்கிறார். ஓரினச்சேர்க்கை குறித்து நடிகை நீலிமா ராணியின் தன்னுடைய அதிரடியான கருத்தை பதிவிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *