ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த தமிழ் நடிகையின் தற்போதைய நிலை…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகையின் தற்போதைய நிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 90’ஸ்களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் பலர் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளனர். அந்த வகையில் வள்ளி திருமணம் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடித்தவர் மாரிக்கன்னு. இவரின் நடிப்பு மக்களை கவர்ந்ததோடு ஜனாதிபதி கையால் சிறந்த நடிகை என்று விருது பெற்றார். அதே சமயத்தில் சினிமாவை தவிர்த்து நாடகங்களில் நடித்தும் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்தவர்.

இவர் வள்ளி திருமணம், திருவிளையாடல் போன்ற பல கதைகளில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய நடிப்பை பார்ப்பதற்கே மக்கள் கூட்டம் திரண்டு வருவார்களாம். இப்படி சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகை மாரிக்கண்ணு தற்போது ரோட்டில் அனாதையாக ஆதரவு இன்றி வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து ஊர் மக்கள் கூறியதாவது, இந்த அம்மாவை பார்ப்பதற்கு யாரும் வருவதில்லை. இவர்கள் இப்படித்தான் ரொம்ப காலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு எப்போ சாப்பிட தோணுகிறதோ அப்ப சாப்பிடுவார், தூங்குவார், கோயில்களின் திண்ணைகளில் அமர்ந்து இருப்பார்.

மனநிலை சரியில்லை என்றாலும் யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்க மாட்டார் என்று கூறியிருந்தனர். ஜனாதிபதி கையில் விருது வாங்கிய நடிகை ரோட்டில் வசித்து வருவது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *