என் படுக்கையறை காட்சியை என் குடும்பத்தினர் பார்த்துவிட்டு…! என்ன சொன்னார்கள் தெரியுமா …? ரகசியம் உடைத்த நிவேதா பெத்துராஜ்…!

நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய படுக்கையறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை பார்த்த குடும்பத்தினர் கொடுத்த ரியாக்ஷன் என்ன..? என்று சமீபத்திய பேட்டி ஒன்றிய பதிவு செய்திருக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த படத்தை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன்மாணிக்கவேல். திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் பார்ட்டி இன்னும் வெளியாகாமல் பெட்டியிலேயே தூங்குகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான

இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.ரிலீஸ் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வரும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் நடித்துள்ள கிளாமர் காட்சிகள், படுக்கையறை காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் ஆகியவற்றை பார்த்த என் குடும்பத்தினரின் ரியாக்ஷன் என்ன என்று..? பதிவு செய்திருக்கிறார்.அதில் அவர் கூறியதாவது ஆரம்பத்தில் நான் குடும்ப பங்கான கதாபாத்திரத்தை தான் தேர்வு செய்து நடித்து வந்தேன். தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் மட்டும் கவர்ச்சியாக நடித்தேன்.

என்னுடைய கம்ஃபோர்ட் ஜோன் என்ன என்று எனக்கு தெரியும். ஆனாலும் அதிலிருந்து தள்ளி அந்த படத்தில் இருந்து நடித்திருந்தேன். இதை பார்த்த என்னுடைய குடும்பத்தினர் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் என்னுடைய தொழில் குறித்து புரிந்து கொண்டார்கள். நானும் உறுதியாகவே இருக்கிறேன். எக்காரணம் கொண்டும் படுமோசமான காட்சிகளில் நடிக்க கூடாது. படத்தை பார்க்கக்கூடிய என்னுடைய குடும்பத்தினர் முகம் சுளிக்க கூடாது. 20 ஆண்டுகள் கழித்து என்னுடைய குழந்தைகளுடன் இந்த படத்தை பார்க்கும் பொழுது அவர்களும் முகம் சுளிக்கும்படி இருக்க கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன் என்று நிவேதா பெத்துராஜ் பதிவு செய்திருக்கிறார்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *