என்ன டிரெஸ் இது…! ரூமுக்கு போய் டிரெஸ்ஸ மாத்திட்டு வா…! நயன்தாராவை படப்பிடிப்பில் திட்டிய இயக்குனர்…!

சினிமா வாழ்க்கையில் 20 ஆண்டுகளை கடந்த சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்துக்கொண்டு லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. சமீபத்தில் பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்ததை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகுவதோடு தன்னுடைய சம்பளத்தை 12 கோடியாக ஏற்றியும் இருக்கிறார். கடந்த 2022ல் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த நயன், நடிப்பை தாண்டி பல தொழில்களை ஆரம்பித்து காசு சம்பாதித்தும் வருகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் பல இன்னல்கள், அவமானங்கள், தோல்விகளை சந்தித்ததால், சினிமாவையே ஒதுக்க நினைத்தார் நயன்தாரா. அதிலிருந்து மீண்டு, தன் திறமையால் பல படங்களில் நடித்து டாப் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார்.

அந்தவகையில், நடிகை நயன் தாராவின் அறிமுகமான சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட சில அவமான சம்பவங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இயக்குனர் பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை படத்தில் நயன் தாரா தான் முதலில் நடிக்கவிருந்தாராம். ஆனால் ஆடிஷனுக்கு தாமதாக நயன் தாரா சென்ற காரணத்தால் படத்தில் இருந்து தூக்கி இருக்கிறார் பார்த்திபன். இதனைதொடர்ந்து ஐயா படத்தின் மூலம் நயன்தாரா அறிமுகமாகினார். அப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் இயக்குனர் ஹரி கடுமையாக திட்டிய சம்பவமும் லீக்காகியுள்ளது. முதல் நாள் ஷூட்டிங் சமயத்தில் நயன்,

மாடர்ன் ஆடையில் சென்றிருப்பதை பார்த்த இயக்குனர் ஹரி கடுமையாக டென்ஷனாகிவிட்டாராம்.நயனிடம், ஒழுங்கா ரூமுக்கு போ.. நான் உன்னை எப்படி கற்பனை செய்து வைத்திருக்கிறேன் தெரியுமா. பக்காவான கிராமத்து பெண் ரோல் உனக்கு, இப்படி வந்து நிக்கிற. போய் டிரெஸ் மாத்திட்டு வா என்று கோபமாக திட்டியிருக்கிறார். உடனே நயன்தாராவும் ரூமுக்கு சென்று உடையை மாற்றிவிட்டு வந்தபின் தான் ஹரி சமாதானமாகியிருக்கிறாராம். இந்த சம்பவத்தை பல ஆண்டுகளுக்கு பின் நடிகர் சரத்குமார் ஒரு பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *