என்னுடைய ப்ரா, ஜட்டியை கூட விட்டு வைக்கல…! தனுஷ் பட நடிகை கண்ணீருடன் பரபரப்பு புகார்…!

நடிகர் தனுஷின் குட்டி படத்தில் கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் பாடலில் குத்தாட்டம் போட்டு பிரபலமானவர் நடிகை மேக்னா நாயுடு.தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “சரவணா” திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மேக்னா நாயுடு அதனை தொடர்ந்து ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தயம், குட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் என்னுடைய ஜட்டியை கூட விட்டு வைக்கவில்லை என்று இவர் கொடுத்துள்ள பரபரப்பு புகார் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவாவில் இருக்கக்கூடிய என்னுடைய வீட்டில் வாடகைக்கு குடியிருந்த தம்பதிகள் வாடகை தராமல் சென்றதுடன் வீட்டில் இருந்த என்னுடைய ப்ரா, ஜட்டியை கூட விடாமல் அனைத்தையும் எடுத்துச் சென்று விட்டனர் என்று புகார் கூறியுள்ளார்.

மேக்னா நாயுடு. இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது எனக்கு கோவாவில் சொந்தமான ஒரு வீடு இருக்கின்றது.அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். அதில் திருமணமான தம்பதியினர் வந்து தங்கியிருந்தனர். அவர்களின் சொந்த ஊர் மும்பை என்றும் அதற்கான ஆதார் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை முகவரி சான்றாக கொடுத்தனர். சில மாதங்களாக வாடகை தராமல் இழுத்தடித்து வந்த அவர்கள் திடீரென மாயமாகி விட்டார்கள். வாடகை தராமல் ஓடியது மட்டுமில்லாமல் நான் என்னுடைய வீட்டில் வைத்திருந்த

விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள், ஸ்பீக்கர்..  என்னுடைய ப்ரா, ஜட்டியை கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் தூக்கி சென்று விட்டனர்.இதுமட்டுமில்லாமல் அக்கம்பக்கத்தினரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை பெற்று ஏமாற்றி எதுவும் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர் என்றும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் நடிகை மேக்னா நாயுடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *