என்னது, நான் பிக் பாஸ்க்கு போறேனா…? எனக்கே தெரியாத விஷயத்தை இணையத்தில் வைரலாக்கும் இணையவாசிகள்…! பதிலடி கொடுத்த நடிகை…!

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையை விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த, ஆறு சீசன் வெற்றிகரமாக ஓடி தற்போது ஏழாவது சீசன் கூடிய விரைவில் தொடங்க இருக்கின்றது.அந்த வகையில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக யார் பங்கேற்பார் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு கேள்வியாக அனுப்பப்பட்டு வருகின்றது.அந்த வகையில் இணையவாசிகள் தற்பொழுது ஒரு சில பிரபலங்களை பற்றி தகவல்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டு வீடாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். அதே வகையில் போட்டியாளர்கள் கண்டிப்பாக மற்றவர்களுக்கு சவாலாக இருக்கும் படியாக இருப்பவர்களை தான் கண்டிப்பாக வருவார்கள் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் உடன் நடுரோட்டில் சண்டை போட்ட நடிகை ரேகா நாயர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

அப்படி இருக்கும் நிலையில் இந்த தகவலை அறிந்து ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது இவரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு நடிகை என்னை ஒரு காட்டில் விட்டால் கூடஎத்தனை நாள் வேண்டுமானாலும் இருப்பேன். ஆனால், கண்டிப்பாக என்னால் பிக் பாஸ் வீட்டுக்கு போக மாட்டேன் என்று நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *