எத்தன வருஷம் ஆனாலும் விடமாட்டேன்…! போராடும் ஜெயம் ரவி- ஆர்த்தி கஸ்டடியில் மகன்கள்…!

“ 20 வருடம் ஆனாலும் ஆர்த்தியிடம் விவாகரத்து வாங்க விடாமல் விடமாட்டேன்..” என நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. Brother படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து சர்ச்சை பாரியளவில் வெடித்து கொண்டிருக்கிறது. மாறாக ஜெயம் ரவி சென்ற கோவா பயணம் குறித்து ஏகப்பட்ட சலசலப்புகள் வெளியாகி வருகின்றது.என்னுடைய மகன்கள் எனக்கு வேண்டும். விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் வெளியில் வந்த ஜெயம் ரவி ஒரு முடிவுகளை மீடியாக்களிடம் ஓபனாக கூறியுள்ளார். அதாவது, “ என்னுடைய எதிர்காலமே எனது மகன்கள் ஆரவ் மற்றும் அயான் தான். அவர்களை என்னுடைய கஸ்டடியில் எடுக்க போராடுவேன்.

விவாகரத்துக்காக 10 ஆண்டுகள் என்ன 20 ஆண்டுகள் கூட கோர்ட்டில் போராடுவேன். எனது சந்தோஷமே என்னுடைய மகன்கள் தான். என்னுடைய மகன்களை வைத்து படம் தயாரிப்பது என்னுடைய கனவு.ஆர்த்திக்கு என்னுடைய சமரசம் செய்யும் எண்ணம் இருந்தால் ஏன் காதலி பற்றி பரப்ப வேண்டும். எங்களுக்குள் நடக்கும் விவாகரத்து பிரச்சினையில் ஏன் சம்பந்தமே இல்லாமல் கெனிஷா உள்ளே வந்தார். ஆர்த்தியுடன் வாழ்வது சாத்தியம் இல்லை. மாறாக என்னுடைய மகன்கள் எனக்கு வேண்டும்…” என உறுதியாக பேசியுள்ளார். இந்த செய்தி ஜெயம் ரவி – ஆர்த்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரிடமிருந்து மகன்களை எப்படி ஆர்த்தி ரவி காப்பார் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *