உடலுறவு-ன்னா அப்படிதான் இருக்க வேண்டும்…! நடிகை வேதிகா ஓப்பன் டாக்…! முகம் சுளிக்கும் ரசிகர்கள் …!

தமிழில் நடிகர் அர்ஜின் நடித்து வெளியான மதராசி படத்தின் மூலம் அறிமுகமாகி ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வேதிகா. தமிழ், தெலுங்கு என்று நடித்து வந்த வேதிகா தமிழில் கடைசியாக காவியத்தலைவன் படத்தில் நடித்து வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். கிளாமராக நடித்தும், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படத்தையும் பகிர்ந்து வரும் வேதிகா உடலுறவு குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதில், காதல் என்பது ஆறுபோல் தடைகளையும் பொருட்படுத்தாமல் செல்ல வேண்டும்.

எந்த நிபந்தனையும் இருக்க கூடாது என்றும் நீ இப்படி இருந்தால் காதலிப்பேன், அப்படி இருந்தால் காதலிக்க மாட்டேன் என்ற காரணத்தை வைத்து இருவரும் காதலில் இருந்தால் அது காதலாக இருக்காது. எந்த நிபந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். நிபந்தனை இல்லாமல் காதலித்தால் தான் ஆறு உடலுறவு என்ற கடலில் சங்கமிக்க முடியும் என்றும் உடலுறவில் எந்த ஒளிவுமறைவும் நிபந்தனைகளும் இல்லாமல் இருக்க முடிகிறது என்றால் அதுதான் உண்மை காதல்.

உடலுறவிலும் எந்த ஒரு ஒளிவு மறைவோ நிபந்தனையோ இல்லாமல் இருக்க முடிகிறது என்றால் அதுதான் உண்மையான காதலின் வெளிப்பாடு. தன்னுடைய துணையின் தேவையை புரிந்து கொண்டு அதனை ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்து கொள்வது தான் உடலுறவு என்பததுடைய தார்பரீகம். அதுவே ஒரு முழுமையான காதலாகவும் முழுமையான வாழ்க்கையாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன் என்று பேசி இருக்கிறார் நடிகை வேதிகா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *