இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மீனாவே சொன்ன பதில்…!!! என்ன கூறியுள்ளார் பாருங்க…!!!

நடிகை மீனா 90களில் இருந்த நாயகிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம் நடிகை மீனா.தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. கோலிவுட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், கடந்த 2009-ம் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு நைனிகா என்கிற பெண் குழந்தையும் உள்ளது. முத்து படத்தில் இவர் தில்லானா தில்லானா பாடலுக்கு ஆடிய ஆட்டத்தை பார்த்தே ரசிகர்கள் மயங்கினர்.

அந்த அளவிற்கு அப்பாடலில் இடுப்பை ஆட்டி செம்ம ஆட்டம் போட்டார். அண்மையில் கூட இப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக நல்ல டிஆர்பி ரேட்டிங்கை பெற்றது.திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நடிகை மீனா, முக்கியமான வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். மீனாவின் மகள் நைனிகாவும் விஜய்யின் தெறி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

நடிகை மீனாவை திருமணம் செய்துகொண்ட பின் அவரை படங்களில் நடிக்க அனுமதித்து அவருக்கு பெரும் துணையாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் காலமானார். த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு நடிகை மீனா இன்னும் எந்த படங்களும் நடிக்க தொடங்கவில்லை.இரண்டாவது திருமணம் இந்த வருடம் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்,

இது அவருக்கு துக்க வருடமாக அமைந்தது. இந்த நேரத்தில் தான் நடிகை மீனாவின் மறுமணம் குறித்து தகவல் வந்தது. இதுகுறித்து நடிகை மீனா தற்போது, எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் இதுபற்றி எல்லாம் பேசுவதா. நான் இப்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.மற்றபடி என்னை பற்றி பரவும் தகவல் வெறும் வதந்தியே என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *