இதுவரை இல்லாத மாடர்ன் ஆடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்…! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என பிரபலமான இவர் தற்போது ஹிந்தி சினிமாவிலும் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான கீர்த்தி சுரேஷ் இன்று தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். வெறும் ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். தனி ஒரு நடிகையாக இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் இவருக்கு மேலும் புகழை தேடி தந்தது.

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.மகாநடி படத்திற்கான தேசிய விருதை பெற்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக மாறி வந்தார். தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய ரோலில் நடித்து வரும் கீர்த்தி நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், கேரள ஸ்டைலில் துபாயின் ஓணம் கொண்டாடி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். சமீபத்தில் துபாய்யில் நடந்த SIIMA விருதுவிழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், தெலுங்கு மொழிக்கான தசரா படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றிருந்தார். இந்நிலையில் Salon & Clinic Launch கடையை திறக்க இதுவரை இல்லாத கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் படி சென்றிருக்கிறார். அவர் அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *