இதற்காக நான் எந்த ஆப்ரேஷனும் பண்ணிக்கல…! ரகசியம் உடைத்த கீர்த்தி சுரேஷ்…!

நிறைய பேர் என்னை பார்த்து ஆப்பரேஷன் செய்தீர்களா சிகிச்சை ஏதேனும் எடுத்துக் கொண்டீர்களா..? என்ற கேள்வி எழுப்பினார்கள். அதற்கு என்ன காரணம்..? என்று நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, மகாநதி படத்தில் நடித்த பிறகுதான் என்னுடைய உடல் நலலின் நான் அக்கறை காட்ட தொடங்கினேன். அதற்கு முன்பு ஒரு நடிகையாக படங்களில் நடிப்பது.. வீட்டிற்கு வருவது.. சாப்பிடுவது.. தூங்கி விடுவது இதுதான் என்னுடைய வழக்கமான வாழ்க்கை முறையாக இருந்தது. நடிகை என்றால் இப்படித்தான் என்று இருந்தேன்.

ஆனால் இப்படி இருக்கக் கூடாது என்பது எனக்கு தாமதமாக தான் தெரிய வந்தது. ஏனென்றால் நடிகைக்கு நடிப்பு திறமை எவ்வளவு முக்கியமோ..? அதே அளவுக்கு அவங்களுடைய தோற்றமும் முக்கியம் என்று தெரிந்து கொண்டேன். அதன்பிறகு தான் என்னுடைய உடல் எடையை குறைக்க ஆரம்பித்தேன்.இதற்காக நான் சிகிச்சையோ அல்லது வேறு எதையும் நான் செய்து கொள்ளவில்லை. ஒரு பத்து மாதத்தில் பத்து கிலோ எடை குறைந்தேன். இதற்காக சிறப்பு வகுப்புகள் அது.. இது.. என எதையும் நான் செய்யவில்லை. உணவு கட்டுப்பாடு கூட பெரிதாக நான் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை..

புதிதாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். யோகா செய்ய ஆரம்பித்தேன்.. உடல் நலலில் கவனம் செலுத்து தொடங்கினேன். முறையான உணவு வகைகளை எடுத்துக் கொண்டேன்.. இயற்கையான முறையில் 10 கிலோ எடை குறைந்து இருக்கிறேன். அவ்வளவுதான். ஆனால், இதை பார்க்கும் பொழுதே நிறைய பேர் ஏதேனும் ஆபரேஷன் செய்தீர்களா..? இதற்காக என்ன சிகிச்சை எடுத்துக் கொண்டீர்கள்..? என்று தான் கேட்கிறார்கள். அப்படி எல்லாம் நான் எதுவும் செய்யவில்லை என பதிவு செய்து இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *