இதனால் தான் அரவிந்தசாமி பிறந்ததும் தத்து கொடுத்துட்டேன்…! ரகசியம் உடைத்த மெட்டி ஒலி டெல்லி குமார்…! வீடியோவை பார்த்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி …!

பிரபல நடிகர் டெல்லி குமார் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் குறிப்பாக மெட்டி ஒலி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பிரபல நடிகர் அரவிந்த்சாமியின் உண்மையான தந்தை இவர்தான். 90களில் நடிகர் ரஜினிகாந்தை ஓரங்கட்டும் அளவுக்கு பிரபலமாக இருந்தவர் அரவிந்த்சாமி. எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தால் அவர் அரவிந்த்சாமி போல் இருக்க வேண்டும் என்று 90ஸ் இளம்பெண்கள் பலரும் வாய்விட்டு கேட்கும் அளவுக்கு பிரபலமாக இருந்தவர் அரவிந்த்சாமி.

பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் அரவிந்த்சாமி கடந்த 1994 ஆம் ஆண்டு காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு மனைவியை பிரிந்தார் மனைவியை பிரிந்தாலும் தன்னுடைய குழந்தைகளை தன்னுடைய பாதுகாப்பிலேயே வளர்த்து வருகிறார்.அரவிந்த் சாமியின் தந்தை சீரியல் நடிகர் டெல்லி குமார் என்று பலரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

Aravind Swami at 63rd Filmfare Awards 2016 (South) Press Meet

இந்நிலையில் டெல்லி குமார் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அரவிந்த்சாமி என்னுடைய மகன்தான் அவன் பிறந்த உடனே என்னுடைய மனைவியின் அக்காவுக்கு தத்து கொடுத்து விட்டோம். அரவிந்த்சாமி என்னுடைய மகன் என்று வரும் தகவல் உண்மைதான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என பேசி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *