‘முதற்கனவே முதற்கனவே’ பாடல் தான் இன்ஸ்டாவை கலக்கி வருகிறது.பாலிவுட் சினிமாவின் பெரிய நடிகர் ராஜேஷ் கண்ணா மற்றும் பாலிவுட் நடிகையான டிம்பில் கபாடியாவின் மகள் தான் ரின்கி கண்ணா. இவர் பாலிவுட் சினிமாவில் 1999ம் ஆண்டு பியார் மெயின் கபி கபி என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்துவந்த இவர் 2001ம் ஆண்டு பிரசாந்துடன் இணைந்து தமிழில் மஜ்னு என்ற படத்தில் நடித்தார். படத்தில் இடம்பெற்ற முதற்கனவே முதற்கனவே பாடல்கள் எல்லாம் செம சூப்பர டூப்பர் ஹிட்.இவர் தொழிலதிபர் சமீர் சரண் என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ரின்கி கண்ணா பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ராஜேஷ் கண்ணா மற்றும் பாலிவுட் நடிகையான டிம்பில் கபாடியாவின் இளைய மகள்தான் ரின்கி. 1999இல் பியார் மெயின் கபி கபி என்னும் படத்தில் அறிமுகமானார்.இந்த படத்திற்காக ஜீ சினி விருதுகளிடம் இருந்து சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றிருக்கிறார். பின்னர் சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். 5 வருடத்தில் 9 படங்களில் நடித்துள்ளார். முதற்கனவே.. 2001இல் பிரசாந்துடன் இணைந்து மஜுனு படத்தில் நடித்தார்.
அந்தப்பட பாடலான ’முதற்கனவே முதற்கனவே’ தற்போது இன்ஸ்டா வாசிகளிடம் வைரலாகி வருகிறது. அந்த பாடலின் எமோஷனை அப்படியே முகத்தில் காட்டியிருப்பார். அந்த அளவிற்கு அந்த பாடலில் வாழ்ந்திருப்பார். தொடர்ந்து, தொழிலதிபரான சமீர் சரணை திருமணம் செய்து லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். ரின்கி-சமீர் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அவ்வப்போது குடும்பத்தினரை சந்திப்பதற்காக இந்தியா வந்து செல்கிறார்.