ஆண்கள் இடுப்பில் கைவைத்தால் அனுபவிக்கனும் ஆராயக்கூடாது…! சர்ச்சையை கிளப்பும் ரேகா நாயர்…!

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர்.‘‘என் மகள், என் வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டாள். சுடுதண்ணி கூட போடமாட்டாள். கெட்டில் போட்டால் சுடு தண்ணி தரும். அவள் போடிங் ஸ்கூலில் படித்தவள். அவள் வேலையை அவளுக்கு செய்யத் தெரியும். ஆனால் வீட்டில் அவள் வேலையை அவள் செய்யமாட்டாள். அவள் பூப்பெய்த போது அவளுக்கு எப்படி ஃபேட்ஸ் வைக்க வேண்டும் என்பதை நான் சொல்லிக் கொடுப்பேன். ஒரு பையனிடம் எந்த வயதில் பேசலாம், எந்த மாதிரி பேசலாம், எப்போ ஆண்களை பார்க்கும் போது ஆசைகள் வரும் என்பதையெல்லாம் அவளிடம் கூறுவேன்.

இந்த வயதில் அவளுக்கு அனைவரையும் காதலிக்க தோன்றும் வயது. கறுப்பு, வெள்ளை, தாடி வைத்தவன், தாடி இல்லாதவன் எல்லாரையும் காதலிக்க தோன்றும். 16 முதல் 24 வயதில் அந்த எண்ணம் தானாக வரும். இப்போ அவளுக்கு 17 வயது ஆகிறது. ஒரு அம்மாவா நான் பயப்படனுமானு கேட்டா, நான் பயப்பட மாட்டேன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேகா நாயர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அதில் அவர், தற்போது சில பெண்கள் நான் இது போன்று தான் ட்ரஸ் போடுவேன்..உங்களுக்கு என்ன?

என்று சொல்கிறார்கள். அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ. நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால், அதற்கும் நான் தயாரா இருக்கேன். ஆண்கள் கைவச்சுட்டு போகட்டும் என்கிற மனநிலை இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண்களிடம் இல்லையே? என்று ரேகா நாயர் கூறியுள்ளார். தற்போது ரேகா நாயரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *