“ஆடையின்றி இருக்கும் காட்சிகள்…!” நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட கண்ணீர் வீடியோ…! பரபரப்பு தகவல்…!

ஆந்திர அமைச்சரும் பிரபல நடிகையுமான ரோஜாவின் ஆடையின்றி இருக்கும் காட்சிகளை முழுமையாக வெளியிடுவோம் என தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவர் அனிதா எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா இவர் தன்னுடைய வீட்டில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் ஆடையின்றி படங்களில் நடித்ததாக கூறி கூறி என்னை சித்திரவதை செய்கிறார்கள். சட்டசபையில் அந்த சீடிகளை கொண்டு வந்து காட்டினார்கள். ஆனால் அந்த சீடியில் இருப்பது நான்தான் என

இதுவரை யாராலும் நிரூபிக்கப்படவில்லை. என்னைப் போலவே உடல்வாக இருக்கக் கூடிய ஒரு பெண்ணை நான்தான் அந்த வீடியோவில் நடித்திருப்பது எனக்கு கூறி மிகப் பெரிய வேதனையை கொடுக்கிறார்கள்.பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது என் குணத்தை மதிப்பிட இவர்கள் யார்..? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகிறது என கண்ணீர் விட்டு பேசி இருந்தார்.தற்பொழுது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

நடிகைகள் பலரும் ரோஜாவுக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை வீடியோ மூலம் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் கண் கலங்கியபடி பேசுகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அவர் கூறியதாவது, அது யாராக இருந்தாலும் விடக்கூடாது. பாரத பிரதமர் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் பாரத் மாதா கி ஜே என்று கர்வமாக கூறுகிறோம். இதற்கு காரணம் இந்தியா என்ற தாயை பெண்ணாக மதித்து நாங்கள் அவரை கொண்டாடுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *