அம்மா கொடுத்த காபி… ருசித்து குடித்த குழந்தைகள்.. அதன் பின் நடந்த நெஞ்சை உருக்கும் சோகச் சம்பவம்…!

அம்மா என்பவர் நம்பிக்கைக்கு பாத்திரப்பட்டவர். ஒரு குழந்தை இந்த உலகில் பிறந்த முதல்நொடியில் தாய் கொடுக்கும் தாய்பாலை சாப்பிட்டே உயிர் நாடியை பிடித்து வாழ்கிறது. அதனால் தான் அம்மாக்கள் கொடுக்கும் உணவுகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் அந்த தாயே காபி குடுத்து கொல்ல நினைத்தால்?

ஆம்…தான் பெற்ற நான்கு குழந்தைகளுக்கு காபியில் விசம் வைத்து கொல்ல முயற்சித்துவிட்டு, தானும் உயிரை விட்டிருக்கிறார் ஒருதாய்.ஆந்திராவின் குர்னூலை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் நான்கு குழந்தைகளின் தாயும்கூட. இந்நிலையில் குடும்ப பிரச்னையின் காரணமாக சமீபகாலமாகவே மன உலைச்சலில் இருந்தார் வரலெட்சுமி.

இதன் உச்சமாக காபியில் விசம் கலந்து தன் நான்கு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். எதுவுமே அறியாத பச்சைக் குழந்தைகள் தன் தாய் தானே கொடுக்கிறார் என அதை குடிக்க…

இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிட்சையில் இருக்கிறார்கள். வரலெட்சுமி உயிர் இழந்து விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பச்சிளம் குழந்தைகளை இந்த நிலைக்கு தள்ளிய தாய் இப்படி வாழவே கூடாது என்பதற்கும் சமகால முன்னுதாரணம் ஆகியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *