அப்போதிலிருந்தே எனக்கு அந்த பழக்கம் இருக்கு…! அபிராமி வெங்கடாசலம் ஓப்பன் டாக்…!

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது அவரிடம் நீங்கள் சீக்கிரமாக தயாராக வேண்டும் ஒரு பத்து நிமிடத்தில் தயாராக வேண்டும் என்றால் எந்த ஆடையை நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை அபிராமி வெங்கடாச்சலம், கண்டிப்பாக புடவை தான். ஏனென்றால் நான் எளிமையாக புடவை கட்டி விடுவேன். புடவை கட்ட வேண்டும் என்றால் அதற்கு சில சேஃப்டி பின்கள் தேவைப்படும்.

ஆனால், அந்த சேஃப்டி பின்கள் இல்லாமலேயே சில நிமிடங்களில் புடவை கட்டி விடுவேன். நான்கு முதல் ஐந்து நிமிடத்தில் புடவை கட்டிவிடலாம். அதன் பிறகு கண்களுக்கு காஜல்.. ஐ-லைனர் இவ்வளவு தான் என்னுடைய அதிகபட்ச மேகப்பாக இருக்கும்.கலாக்ஷேத்ராவில் இருந்த போது புடவை கட்டுவதற்கு தாமதமானால் எங்களை கடுமையாக திட்டுவார்கள்.

எனவே அதற்கு பயந்து கொண்டு வேக வேகமாக புடவை கட்ட கற்றுக் கொண்டேன். அதனால் என்னால் எந்த ஒரு சேஃப்டி பின்னும் இல்லாமல் நான்கு முதல் ஐந்து நிமிடத்தில் புடவை கட்டிவிட முடியும். கலாச்சத்திராவில் இருக்கும் போது இருந்தே இந்த பழக்கம் எனக்கு இருக்கிறது என பேசி இருக்கிறார் அபிராமி வெங்கடாசலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *