அந்த விஷயத்தில் பெரிய தப்பு பண்ணிட்டேன்…! இதை யாரும் செய்யவேண்டாம்…! சுந்தரா டிராவல்ஸ் ராதா அட்வைஸ்…!

சுந்தரா டிராவல்ஸ் கதாநாயகி ராதா தனது கஷ்டத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். ராதா தமிழ் சினிமாவில் நடிகர் முரளி, வடிவேலு நடிப்பில் சுந்தரா டிராவல்ஸ் என்ற படம் வெளியானது. அதில் ஹீரோயினாக நடித்து நடிகை ராதா அறிமுகமானார். இந்த படம் அதன் காமெடியால் பயங்கர ஹிட் ஆனது, தற்பொழுது வரை காமெடிக்காக இந்த படம் பேசப்பட்டு வருகிறது.இந்த படத்திற்கு பின்னர் நடிகை ராதா வாய்ப்புகள் இல்லமால் காணாமல் போனார். பின்னர் இந்த ஒரு படமே இவருக்கு அடையாளமாக ஆனது, தற்பொழுது இவர் பல ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீசன் 2-வில் நடித்து வருகிறார். நடிகை பேட்டி இந்நிலையில், இவர் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையுடன் இருந்தார், தனது முதல் கணவரை பிரிந்தார்.

எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வரும் வசந்த ராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவர் அடித்து துன்புறுத்துவதாக புகாரளித்தார், இதுகுறித்து விசாரணை நடந்து வந்தது பிறகு இவரது பிரச்சனை முடிந்தது. தற்பொழுது பேட்டியில் இவர், “சிறுவயதில் இருந்தே படத்தில் நடிப்பது தான் என் லட்சியமாக இருந்தது.ஆனால், திருமணத்திற்கு பிறகு வீடு குடும்பம் என்று ஐக்கியமாகி விட்டேன். இது நான் செய்த மிகப்பெரிய தவறு. என்னுடைய கேரியரை தொலைத்துவிட்டு திருமணத்தை செய்து கொண்டேன்.

இது போல் நான் செய்திருக்கக் கூடாது. என்னுடைய வேலை, என்னை புரிந்து கொண்ட ஒருவரை நான் தேர்வு செய்து திருமணம் செய்திருக்க வேண்டும். உங்களை புரிந்து கொண்ட ஒருவர் வாழ்க்கை துணையாக அமையவில்லை என்றால், நீங்கள் தனியாகவே இருந்து விடுங்கள். என் வாழ்க்கையில் நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இந்த தவறை யாரும் செய்துவிடாதீர்கள். ஒரு நடிகையாக இன்றைய இளம் நடிகைகளுக்கு நான் சொல்லும் அட்வைஸ் இதுதான்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *