அந்த நேரத்தில் கண்ட்ரோல் பண்ண முடியாது…! ஓப்பனாக கூறிய ரகுல் ப்ரீத் சிங்…! ஷாக் ஆன சமந்தா…!

நடிகை சமந்தா தொகுப்பாளராக கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விருந்தினராக நடிகை ரகுல் ப்ரீத் சிங் கலந்து கொண்டார். அவரிடம் பல்வேறு தனிப்பட்ட விஷயங்கள் குறித்த கேள்விகளை கேட்டு சுவாரசியமான பதில்களை பெற்று விறுவிறுப்பாக அந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார் நடிகை சமந்தா. ஒரு கட்டத்தில் நீங்கள் எப்போதுமே ஃபிட்டாக இருக்கிறீர்கள். அதற்கு உடற்பயிற்சி செய்கிறீர்கள். எல்லாம் சரி, உங்களுடைய உணவு முறை எப்படி இருக்கிறது..? ஒருவேளை உங்களுடைய டேபிள் மீது உங்களுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் வைக்கிறார்கள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?

என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை ராகுல் ப்ரீத் சிங் நான் உணவு கட்டுப்பாடோடு இருக்கிறேன் என்பதால் என் முன் எனக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் வைத்தால் என்னால் அந்த நேரத்தில் கண்ட்ரோல் பண்ணவே முடியாது.கண்டிப்பாக அனைத்திலும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து ருசி பார்த்து விடுவேன். நீங்கள் எவ்வளவு உணவுகளை வைத்தாலும் அனைத்தையும் ருசி பார்ப்பேன்.

எந்த ஒரு பொருளையும் வேண்டாம் என ஒதுக்க மாட்டேன். நீங்கள் 100 உணவை வைத்தால் கூட அந்த நூறையும் நான் சுவை பார்ப்பேன் ஒரு ஸ்பூனாவது சாப்பிட்டு விடுவேன் என கூறி கூறினார். இதனை கேட்டு நடிகை சமந்தா 100 ஸ்பூன் சாப்பிடுவீர்களா..? என்று வாயை பிளந்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *