அந்த நடிகர் மட்டும் இல்லைனா…! அவமானத்தால் சாக நினைத்தேன்…! கண்ணீருடன் பேசிய பேரழகன் சினேகா…!

நடிகை தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். பேரழகன் சினேகா தமிழ் சினிமாவில் இயக்குனர் சசி சங்கர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில், சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் சூர்யா பெண் பார்க்கும் காட்சியில் உயரம் கம்மியான பெண்ணாக சினேகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் கற்பகம்.இவர் அதன்பிறகு வாய்ப்புகள் இன்றி சினிமாவை விட்டு விலகினார். தற்பொழுது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். சோகத்தை பகிர்ந்த நடிகை இந்நிலையில்,

அவர் சிறு வயதில் அவரது அம்மா இறந்துவிட்டார் என்றும், அவர் தான் அக்கா வீட்டில் இருந்து வளர்ந்ததாக கூறியுள்ளார். பின்னர், ஸ்கூலுக்கு செல்லும்போது பசங்க எல்லாரும் குள்ளமாக இருப்பதால் கிண்டல் செய்வார்கள் என்றும், இதனால், ஸ்கூலுக்கு போவதற்கே அவமான இருக்கும், சாகலாம் என்று கூட நினைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.”அதன்பிறகு ராஜா என்பவரை திருமணம் செய்தேன் அவர் அபூர்வசகோதரர்கள் படத்தில் நடித்து இருக்கிறார். திருமணமான ஓராண்டுக்குள் எனக்கு ஓர் மகள் பிறந்தது.

அப்போது தான் மலையாளப்படமான அற்புதத் தீவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பேரழகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்த படத்தில் சினேகா என்ற கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது எங்கே பார்த்தாலும் எல்லாம் என்னை பாராட்டினார்கள். கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் திடிரென இறந்துவிட்டார், அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் அப்போது சூர்யா சார் தான் பணம் கொடுத்து உதவினார், மற்ற எந்த நடிகர்களுடம் எனக்கு உதவி செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *