அந்த இடத்துல என் மகள் மட்டும் தான் பெண்…! மற்ற எல்லோரும் ஆண்கள்…! ஆனால், அர்ச்சனா நெகிழ்ச்சி…!

90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி பல என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார் .பிரபல தொகுப்பாளனி மற்றும் நடிகை அர்ச்சனா சமீபத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது பொதுவாக மீடியா என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு இடமாக பார்க்கப்படுகிறது. அதிலும் சினிமா இன்னும் மோசமான நிலையில் தான் பலராலும் பார்க்கப்படுகிறது. ஆனால், சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்கும் போது எங்களுக்கு கிடைத்த முதல் விஷயம் பாதுகாப்பு. டாக்டர் படத்தில் நடிக்கும் போது நடிகைகள் துணை நடிகைகள் என அனைவரும் தங்களை பாதுகாப்பாக உணர்ந்தார்கள். எடுத்துக்காட்டாக ஒரு காட்சியில் என்னுடைய மகள் கடத்தப்படுவார். அந்த படகில் என்னுடைய மகள் மட்டும் தான் பெண் மற்ற அனைவரும் ஆண்கள். நான் அவளிடம் கேட்டேன்.. நீ இதை பண்ணிடுவியா..?

என்று கேட்டேன்.. எதுவும் பிரச்சினை இல்லை நான் செய்து விடுவேன் என்று தைரியமாக கூறினார்.அந்த அளவுக்கு அந்த படத்தில் பாதுகாப்பாக உணர்ந்தோம். படகில் சென்று படப்பிடிப்பு முடித்துவிட்டு அதன் பிறகு என்னிடம் என் மகள் வருவதற்கு கிட்டத்தட்ட 4, 5 மணி நேரம் ஆகிவிட்டது.சென்ற இடத்தில் இவளுக்கு என்ன வேண்டும்.. கழிவறை வசதி என்ன வேண்டும்.. என்று அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து கொடுத்திருக்கிறார்கள்.ஒரு படப்பிடிபில் ஒரு சினிமாவில் அவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்த தருணம் சிவகார்த்திகேயன் படத்தில் தான் என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார் நடிகை அர்ச்சனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *