சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சின்னத்திரை சீரியல் கதாநாயகியாக நடித்து சினிமா பயணத்தை தொடங்கி தற்போது ஜொலித்து வருகிறார். செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி சின்னத்திரையில் கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.இவர் முதலாவதாக மேயாத மான் படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக, சினிமா துறையில் அறிமுகமானார்.
அந்த படத்திற்குப் பிறகு அகிலன் படத்தில் ஜெயம் ரவியுடனும், 10 தல படத்தில் சிம்புவுடனும், ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் உடனும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று அடுத்தடுத்து வெற்றி பெற்றார். எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் படம் அதனைத் தொடர்ந்து பொம்மை என்ற படத்தில் இரண்டாவது முறையாக அவருக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். தற்போது சினிமாவில் மட்டுமல்லாமல் பிசினஸிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதன்பின் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது லீட் ரோலில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், பாலியல் தொல்லை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். சினிமாத்துறையில் மட்டும் அல்ல எல்லா துறையிலும் பாலியல் தொல்லை இருக்கிறது என்றும் அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு ஆளாகியவர்கள் தைரியமாக பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முக்கியமானது அவர்கள் சொல்வதை சமுகம் கேட்டு, பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்வதை நிறுத்த வேண்டும்.
நீ ஏன் இதை முன்பே சொல்லவில்லை என்றும் இப்போ ஏன் சொல்கிறாய் என்றும் கேட்கக்கூடாது, அதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அந்த பிரச்சனையை பற்றி கண்டுகொள்ளாமல் ஒரு பெண் எந்த துறையில் வேலை செய்கிறார் என்ன மாதிரியான வேலை பார்க்கிறார் என்ற பாகுபாடு பார்க்காமல் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார். அவர்கள் சொலவதை கேட்டு ஆதரவு அளிக்க வேண்டுமே தவிர குறை சொல்வதை நிறுத்த வேண்டும் என்று பிரியா பவானி சங்கர் ஒப்பனாக கூறியிருக்கிறார்.