அடடே நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்கார் பாருங்க…!

சமுத்திரக்கனி இயக்கி சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படம் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அந்தப்படத்தில் தன் அழகான கண்களால் பார்வையாளர்களை வசீகரித்த அபிநயாவை நினைவில் இருக்கிறதா? இப்போது அவர் எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

அபிநயா வாய்பேச முடியாத, காதும் கேட்காத மாற்றுத்திறனாளி. ஆனாலும் கொடுக்கும் பாத்திரத்தை உள்வாங்கி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். நாடோடிகள் படவெற்றிக்குப்பின் தொடர்ந்து ஈசன்,வீரம், பூஜை, தனி ஒருவன், குற்றம் 23 படங்களிலும் நடித்திருந்தார். மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும்வகையில் அவர்களுக்கு வாக்குரிமை குறித்து விழிப்புணர்வூட்டும் தூதுவராக தெலுங்கானா மாநில அரசு இவரை நியமித்தது. இதற்கு இவர் சம்பளமும் வாங்கவில்லையாம்.

இந்நிலையில் அபிநயா சமீபத்தில் மாடர்ன் உடையில் போட்டோசூட் ஒன்றை நடத்தினர். அந்த புகைப்படங்களை அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில்போட அது வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *