விஜய் பட இயக்குனரின் உடல்நிலை கவலைக்கிடம்…! வருத்தத்தில் திரையுலகம்…!

சித்திக் தமிழ் மலையாளம் என கலக்கிய இயக்குனர் என்றே சொல்லலாம்..கேரளாவை சேர்ந்த இயக்குனர் சித்திக் 1986 ஆம் ஆண்டு பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.அந்த முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான கதை களத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் இதனால் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது.. இதை தொடர்ந்து மோகன்லாலை வைத்து நாடோடிக்காட்டு என்கிற படத்தை இவர் இயக்கினார்…அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மலையாள திரையுலக முன்னணி நடிகர்களின் பிடித்தமான இயக்குனராகவும் இவர் மாறினார் அதனால் இவர் டாப் டைரக்டர் பட்டியலில் இடத்தை பிடித்தார்.

இவர் தமிழில் தளபதி விஜய்யை வைத்து பிரெண்ட்ஸ் மற்றும் காவலன் படத்தை இயக்கினார்.அதே போல் விஜயகாந்த் – பிரபு தேவா மற்றும் பாண்டியராஜ் அவர்களின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘எங்கள் அண்ணா’ என்ற படத்தை இயக்கினார்.சமீபத்தில் தமிழில் அரவிந்த் சாமியை வைத்து ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார்..அதே போல் மலையாளத்தில் 2020 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளியான ‘பிக் பிரதர்’ படத்தை இயக்கிய நிலையில் இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் சித்திக் நிமோனியா மற்றும் கல்லீரல் நோய் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில்,

கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.இந்நிலையில் நேற்று மதியம் மூன்று மணியளவில் அவருக்கு எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டது.தற்போது இயக்குனர் சித்திக்கின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவருக்கு எக்மோ சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…இவரின் இந்த நிலையால் மலையாள திரையுலகம் வருத்தத்தில் உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *