நடிகர் விஜய் வசிக்கும் வீட்டிற்குப் பக்கத்தில் பல கோடிகளுக்கு மதிப்பிலான புதிய பிளாட் ஒன்றை வாங்கியிருக்கிறார் துல்கர் சல்மான்.பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டியின் மகனாவார். இவர் 2012ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் ஒன்றில் தான் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரைக்கு தன் நடிப்புத் திறமையால் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். மேலும், துல்கர் சல்மான் படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் தமிழில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படமும்
சீதா ராம் திரைப்படமும் அவரின் திரைத்துறைக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் விஜய் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பிளாட் வாங்கியிருக்கிறார்.இந்நிலையில் தளபதி விஜய் தன்னுடைய அலுவலக பணிக்காக சென்னை ஆரியபுரத்தில் பிரம்மாண்ட அப்பார்ட்மெண்ட் ஒன்றை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. இவர் வீடு வாங்கிய தகவல் அறிந்து, அடுத்தடுத்து மூன்று பிரபலங்கள் அவருடைய அப்பார்ட்மெண்டிலும் அவர் அப்பார்ட்மெண்ட் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையிலும் வீடு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வீடு வாங்கிய லிஸ்டில் ஒரு நடிகரின் பெயரும் இடம் பிடித்துள்ளது. அவர் வேறு யாரும் அல்ல, மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தான். அவர் தளபதி விஜய் வீடு வாங்கி உள்ள அப்பார்ட்மெண்டிலேயே, இருக்கும் வீடு ஒன்றை வாங்கி உள்ளாராம். கிட்டத்தட்ட 9000 சதுரடி அளவில், மிகப் பிரமாண்டமாக இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 30 கோடி என கூறப்படுகிறது.இவர் வீடு வாங்கியதற்கான முக்கிய காரணம், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் இவரால் தமிழில் இதுவரை நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.
ஒருவேளை விஜய்யின் அலுவலகத்தின் பக்கத்தில் வீடு வாங்கினால், பெரிய இயக்குனர்களின் கண்பார்வை நம் மீதும் படும் என்ற நம்பிக்கையில் தான் வாங்கி உள்ளாராம். விஜய் சமீபத்தில் ஆரியபுரத்தில் ஒரு பிளாட் வாங்கியதாகவும் அந்தப் பிளாட்டுக்கு பக்கத்திலேயே ஒன்பதாயிரம் ஸ்கொயர் பீட்டில் இருக்கும் பிளாட்டை துல்கர் சல்மான் வாங்கியிருக்கிறார்.விஜய் சமீபத்தில் ஆரியபுரத்தில் ஒரு பிளாட் வாங்கியதாகவும் அந்தப் பிளாட்டுக்கு பக்கத்திலேயே ஒன்பதாயிரம் ஸ்கொயர் பீட்டில் இருக்கும் பிளாட்டை துல்கர் சல்மான் வாங்கியிருக்கிறார். மேலும், இதனை 30 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.