பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா மும்பை மையப்பகுதியில் வாங்கி இருக்கும் புதிய பங்களா பற்றித்தான் பட உலகில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. இந்த பங்களா 4 மாடிகளை கொண்டது. இதன் விலை ரூ.190 கோடி ஆகும். பிரபல இந்தி தயாரிப்பாளரும், டைரக்டருமான யாஷ் சோப்ராவின் மனைவியான மறைந்த பமேலா சோப்ராவின் வீட்டை ஒட்டி இந்த பங்களா அமைந்து இருக்கிறது.பங்களாவை சுற்றிலும் அழகிய தோட்டம், நீச்சல் குளம், யோகா மையம், உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளன.தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்த இப்படத்தில் ஊர்வசி ரவுத்தேலா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படத்தில் நாசர், சுமன், பிரபு, விவேக், ரோபோ ஷங்கர், சச்சு,யோகி பாபு, மயில்சாமி, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து ஊர்வசி ரவுத்தேலாவுக்கு படவாய்ப்புகள் தேடி வந்தன. தெலுங்கில் வெளியான வால்டர் வீரய்யா படத்தில் சிரஞ்சீவியுடனும் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து ராம் பொத்தினேனி நடிக்கும் படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக வீடு வாங்க மும்பையில் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியில் இந்த பங்களாவை ஊர்வசி ரவுத்தேலா வாங்கி இருக்கிறாராம்.
இந்தியில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் கூட அதிகபட்சம் ரூ.100 கோடி ரூ.120 கோடிக்கு மட்டுமே வீடுகள் வாங்கி உள்ள நிலையில் குறைந்த படங்களில் மட்டுமே நடித்துள்ள ஊர்வசி ரவுத்தேலா 29 வயதிலேயே ரூ.190 கோடி பங்களாவை வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.ஊர்வசி ரவுத்தேலா தமிழில் லெஜெண்ட் படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். 2013-ல் ‘சிங் சாப் தி கிரேட்’ இந்தி படம் மூலம் அறிமுகமானார். கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களை சேர்த்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.