ரவீந்தர் மகாலட்சுமியின் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரையின் குயின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘அன்பே வா’ சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். இவர் கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் இவர் முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியுள்ளார்கள்.மகாலட்சுமியின் மகனா இது? இந்த நிலையில் நேற்றைய தினம் சர்வதேச அளவில்“ உலக தந்தையர் தினம்” கொண்டாடப்பட்டது. அந்தவகையில் மகாலட்சுமி அவரின் சமூக வலைத்தளப்பக்கமொன்றில்
தன்னுடைய அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து செய்தி கூறியிருந்தார்.அந்த புகைப்படத்தில் மகாலட்சுமி கை வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? அவர் தான் மகாலட்சுமியின் முதல் குழந்தை. “இவரை சமூக வலைத்தளங்களில் காட்டாமல் இருந்த மகாலட்சுமி வாழ்த்து செய்தியில் சிக்கி விட்டாரா?” என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.