மருத்துவமனையில் ஐஸ்வர்யா: தனுஷ் குடும்பத்திலிருந்து வந்த ஆறுதல் வார்த்தை என்ன தெரியுமா…?

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு தனுஷ் குடும்பத்திலிருந்து ஆறுதல் மெசேஜ் வந்துள்ளது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சினிமா உலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகளின் 18 வயது வாழ்க்கையில், இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் பிரிவதாக ட்விட்டரில் பதிவு ஒன்றினை ஒன்றாக வெளியிட்டிருந்தனர்.

இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், ஒன்று நேர மாட்டார்களா என ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கணவரின் பிரிவினை அறிவித்த பின்பு எந்தவொரு பதிவும் போடாத ஐஸ்வர்யா, நேற்று தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக போஸ்ட் ஒன்றினை வெளியிட்டார்.

அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தயவு செய்து மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள். 2022 கொண்டு வந்துள்ளது. இன்னும் என்னவெல்லாம் எனக்காக வைத்திருக்கிறது என பார்ப்போம் என்று ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா விரைவில் குணமடைய அனைவரும் வேண்டி வரும் நிலையில், ஐஸ்வர்யா இன்னும் சோஷியல் மீடியாவில் தனது பெயரின் பக்கத்தில் இருக்கும் தனுஷின் பெயரை நீக்காமல் இருந்து வருகின்றார். இதனால் விரைவில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், தனுஷின் அண்ணன் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி விரைவில் குணமடைந்து வரவும் என்று ஆறுதல் மெசேஜ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *