மகளை அடக்கம் செய்யும் நேரத்தில் கதறி அழுத விஜய் ஆண்டனி மனைவி…! கடைசியாக மகளிடம் சொன்ன வார்த்தைகள்…!

விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் நடிப்பில் இறுதியாக பிச்சைகாரன் 2 திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி ஒரு நடிகர் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் என பல் திறமை கொண்டவர்.விஜய் ஆண்டனிக்கு 16 வயதில் மீரா என ஒரு பெண் குழந்தை இருந்தது.இந்த நிலையில் குழந்தை இன்றைய தினம் காலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது.இது குறித்து விசாரணையில் மீரா குறித்து பணி பெண்ணிடம் கேட்கையில், மீரா மிகவும் அமைதியான பெண்.

வீட்டில் அவர் இருக்கிறார் என்று கூட தெரியாது. சாப்பாடு வேண்டும் என்றால் மாத்திரம் தான் என்னிடம் பேசுவார். குடும்பமும் அப்படி தான் மிகவும் அன்பாக இருப்பார்கள். மீராவின் மரணம் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.மீராவிற்கு அப்படி ஏதுவும் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை..” என அழுதப்படி உருக்கமாக பேசியுள்ளார். மன அழுத்தம் காரணமாக அவர் இப்படியொரு விபரீத முடிவை எடுத்துள்ளார் என தெரியவந்தது.மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் மீரா.

இதில் Love You All, miss You All எனவும் குறிப்பிட்டு இருந்தார்.இன்று காலை இறுதி சடங்குகள் முடிந்து பிறகு கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்துள்ளனர். அப்போது கடைசியாக தனது மகளிடம் “கருவறையில் உன்னை சுமந்தேன்.. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்” என விஜய் ஆண்டனியின் மனைவி கதறி அழுது பேசியுள்ளார்.தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை மையம் – 104 என்ற எண்ணை பயன்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *