பேன்ட்டே இல்ல…! எனக்கு அது முதல்முறை, கூச்சமா இருந்துச்சு…! பூனம் பஜ்வா ஓபன் டாக்…!

நடிகை தனது அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் நடிகை பூனம் பஜ்வா 2008 ம் ஆண்டு சேவல் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் பரத்திற்கு கதாநாயகியாக நடித்தார், இவரது முதல் படமே அழுத்தமான கதையாக அமைந்தது. அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார்.கச்சேரி ஆரம்படம் படத்தில் இடம் பெற்ற கச்சேரி கச்சேரிபாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இருந்தாலும், இவருக்கு படவாய்ப்பு சரியாக அமையவில்லை. பின்னர் அவர் கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

அதன்பிறகு கிளாமர் வேடங்களைக் குறைக்க முடிவு செய்தார். நடிகையாக முத்திரை பதிக்கக்கூடிய படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவு எடுத்து நடித்து வருகிறார். நடிகை பேட்டி இந்நிலையில், இவர் பேட்டி ஒன்றில் தனது முதல் படத்தின் அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “கோலிவுட்டில் இருந்து விலகுவது என்பது நான் முன்பே முடிவு செய்து அல்லது யோசித்த ஒன்று அல்ல. ரோமியோ ஜூலியட் படத்தின் திரைக்கதை மற்றும் நடிகர்கள் விவரம் தெரிந்ததும், இது நல்ல படமாக இருக்கும் என்று உணர்ந்தேன். நான் அதில்

ஒரு பகுதியாக இருக்க விரும்புவதால் அதை செய்ய முடிவு செய்கிறேன்.மேலும் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறோமே என்ற எண்ணம் வராததால் தான் தனது கேரக்டரில் நடித்தேன். நான் பெரும்பாலான படக்குழுவினரை முதல் முறையாக சந்தித்த தருணம் நன்றாக நியாபகம் இருக்கிறது. முதல் நாள் வெள்ளை சட்டை மட்டுமே அணிய வேண்டியிருந்தது. பேன்ட் எதுவும் இல்லை. இது எனக்கு மிகவும் அறிமுகமில்லாத ஒன்று. கொஞ்சம் கூச்சமாக தான் இருந்தது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *