சின்னத்திரை நடிகையாக வலம் வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் வாணி போஜன், தற்போது சேலையில் எடுத்த கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தெய்வமகள் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இதன்பின் வெள்ளித்திரை படங்களில் நடிக்க ஆரம்பித்த வாணி போஜன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோஷனுக்காக் பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் நடிகை வாணி போஜன். பேட்டியில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஆபாசமாக கருத்துக்களை கூறுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஒருவர் காலம் வந்துவிட்டது அந்த ஷோவுக்காக காத்திருக்கிறேன் என்று மெசேய் செய்துள்ளார். அதற்கு வாணி போஜன், தப்பான மீனிங்கில் கேட்டிருப்பான், அந்த அளவிற்கு
எதிர்ப்பார்க்காதீங்க என்று கூறியிருக்கிறார். மேலும், நல்ல காமி என்ற கருத்துக்கு, இது கொஞ்சம் அசிங்கமான ஒன்று காமிக்கும் போது பாத்துக்க, டிரான்ஸ்பரண்ட் சேலை போட்டால் அதை தவறாக பேசுபவர்களே ஒரு குரூப் இருக்கு. சத்தியமா அவங்க திருந்தவே மாட்டாங்க. நான் பஸ்சில் போகும் போது சிங்னலில் நிற்கும் போது வயசான பெண்கள் உட்காருவாங்க, அவங்களையும் விடமாட்டாங்க, அவங்கள ஒன்னுமே பண்ணமுடியாது என்று வாணி போஜன் கூறியிருக்கிறார்.