பலரை ஏமாற்றினாரா பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்…? சீரியல் நடிகை வெளியிட்ட சர்ச்சை தகவல்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் நடிகர் பாரதிக்கு தம்பியாக நடித்தவர் அகிலன். இவர் நிறைய சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். நடிகர் அகிலன் தனது காதலி அக்ஷயா முரளிதரனை தற்போது திருமணம் செய்துள்ளார். திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை மிகவும் சந்தோஷத்துடன் அகிலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவர் பல படங்களிலும்,சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான அட்சயா முரளிதரன் என்பவரை நடிகர் அகிலன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ளார். மேலும் இவருடைய திருமணத்திற்கு பாரதி கண்ணம்மா சீரியல் நடித்த நடிகர் அருண்,ஃபரீனா உட்பட பல சீரியல் நட்சத்திரங்களும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதில் பாரதி கண்ணம்மா சீரியலில் அவருடன் பணியாற்றிய நடிகர் அருண் மற்றும் பரீனா  உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சீரியலில் அகிலனுக்கு ஜோடியாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி மனோகரன் ஒரு கமெண்ட் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த கமெண்டில், “இதற்கு முன்பு எத்தனை பேரை ஏமாற்றி இருக்கிறாய்? அதையும் சொல்ல வேண்டியது தானே? கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?” என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *