தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஹன்சிகா.அத்தோடு இவர் ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து இவர் விஜய் நடிப்பில் 2011 -ம் ஆண்டு வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.இதுபற்றி அவர் கூறும்போது, “தென்னிந்திய படங்களில் நான் அதிகம் நடித்து வந்ததால் பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர்கள் எனக்கு ஆடைகள் வழங்க மறுத்தனர். விருப்பமில்லை என்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது.
இப்போது, என்னை நிராகரித்தவர்களே, ‘உங்கள் படம் வெளியாகிறது. டிரெய்லர் வெளியீட்டு விழா உள்ளது. ஏன் நீங்கள் எங்கள் ஆடையை அணியக்கூடாது?’ என்று கேட்கின்றனர். நான் அமைதியாக ‘சரி’ என்று சொல்கிறேன். அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் அல்லவா? நான் இந்திய நடிகை என்றே எப்போதும் கூறி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார் . ஹன்சிகா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் ஹன்சிகா அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், தெலுங்கு சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர் ஒருவர் என்னை டேட்டிங் அழைத்து பல முறை துன்புறுத்தினார். நான் அவருக்கு நல்ல பாடம் கத்துகொடுத்துவிட்டேன். அவர் இனி என்னை கேலி செய்ய மாட்டார் என்று கூறியுள்ளார். அத்தோடு கடந்த ஆண்டு ஹன்சிகா சோஹைல் கதுரியா காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.