பத்து வருஷம் ஆயிடுச்சு…? செல்வராகவனுக்கு ஓகே சொன்ன நடிகை…! கொண்டாட்டத்தில் செல்வராகவன் செய்த செயல்…!

தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி என அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். கடந்த வருடம் இவரது இயக்கத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் செல்வராகவன் 2013 ஆம் ஆண்டு பதிவு செய்த ட்வீட் ஒன்றிற்கு 10 வருடங்கள் கழித்து திரிஷா ரிப்ளை செய்திருப்பது தற்போது வைரலாகி இருகிறது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் நான் ஆடவாரி மாடலருக்கும் அர்தாலே வேறுலே என்ற திரைப்படம் இந்த திரைப்படத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிகை திரிஷா நடித்திருப்பார்கள்.அதன்பிறகு தமிழில் ரீமேக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் யாரடி நீ மோகினி. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு செல்வராகவன் ஒரு பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைப்படத்தை பார்த்துள்ளேன்.உங்களுடன் பணியாற்றியதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டாம் பாகம் எடுக்கவும் தயார் என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த 2013ம் ஆண்டு செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீண்ட நாட்களுக்கு பின்னர் ’ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’ திரைப்படத்தைப் பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாகம் எடுக்கவும் தயார்’ என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குநர் செல்வராகவனின் ட்வீட்டுக்கு நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார். ’நான் ரெடி’ என த்ரிஷா கொடுத்துள்ள பதில், தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *