விருமாண்டி திரைப்படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி.கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அபிராமி கடந்த 1995-ம் ஆண்டு மலைாயளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். அதன்பிறகு 1999-ம் ஆண்டு சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பத்ரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தான் கல்லூரியில் படிக்கும்போதே சின்னத்திரையில் தொகுப்பாளியாக இருந்த அபிராமிக்கு பத்ரம் படம் பெரிய வெற்றியை கொடுத்தது.தொடர்ந்து அர்ஜூன் நடிப்பில் வெளியான வாணவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அபிராமி, அதன்பிறகு தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
கடந்த 2004-ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் அபிராமிக்கு பெரிய திருப்புமணையாக அமைந்தது. அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்., கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை அபிராமி திருமணம் செய்து கொண்டார் ராகுல் பிரணவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை. நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார் . அந்த குழந்தைக்கு கல்கி என்று பெயரும் வைத்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு நீண்ட நாட்களாக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று ஆசை.
அதனால் தான் எங்களுக்கான குழந்தையை நான் தத்தெடுத்து இருக்கிறேன். இவளுக்கு கல்கி என பெயர் வைத்ததற்கான காரணம் என்னவென்றால் கல்கி என்பது ஒரு அவதாரம். அதை நான் பெண்ணாக பார்க்கிறேன். பெண்ணால் தான் இந்த உலகில் அனைத்தையும் மாற்ற முடியும்.. உருவாக்கவும் முடியும் என்று கூறியிருக்கிறார் நடிகை அபிராமி.இதனை தொடர்ந்து, இவர்களுடைய குழந்தையின் சிறப்பான எதிர்காலத்திற்கும் இவர்களுடைய மகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.