லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.லியோ படத்தில் நடித்துள்ள நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலில் நடந்த ஃபேன் மீட்டில் கலந்து கொண்டு மனம் திறந்து பல விஷயங்களை பேசினார். கேப்டன் பிரபாகரன், தாயகம் உள்ளிட்ட பல படங்களில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்த மன்சூர் அலி கான் தனது நண்பரின் தற்போதைய நிலைக்கு காரணமே அவர் அரசியலுக்கு வந்தது தான் என உணர்ச்சிப் பொங்க பேசி கேப்டன் ரசிகர்களை கண்கலங்க வைத்து விட்டார்.ஸ்டேஜிலேயே க்ளிசெரின் போடாமல் அழுவீங்களான்னு ஒரு ரசிகர் கேட்க, நானெல்லாம் சினிமாவில் டிப்ளோமா வாங்கிட்டு நடிக்க வந்தவன், அழுகை சீன் என்று சொன்னால், க்ளிசரின் எல்லாம் போட்டுக் கொண்டு கண்ணை வீணாக்க மாட்டேன் என சொல்லிட்டு அந்த மேடையிலேயே கண்கலங்கி அழுது காட்டி ரசிகர்களை புல்லரிக்கச் செய்து விட்டார்.
லோகேஷ் கனகராஜ் உங்களுடைய தீவிர ரசிகர் என்றும் கைதி படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க உங்களை தான் முதலில் தேர்வு செய்தார் என்றும் சொன்னாரே அதை எப்படி பார்க்குறீங்க என ஒரு ரசிகர் கேட்ட போது, என் பெயரை எல்லாம் அவர் சொல்லியிருக்கவே தேவையில்லை. ஆனால், வெளிப்படையாக அவர் பேசியதற்கு ரொம்ப நன்றி. என் நேரம் அந்த படத்தை மிஸ் பண்ணிட்டேன் என்ற மன்சூர் அலி கான் லியோ படத்தில் பல பேரை தூக்கிப் போட்டு பந்தாடியிருக்கேன் என ஃபைட் சீனில் நடித்ததையும் உளறிவிட்டு, அச்சச்சோ சொல்லிட்டேனே என பதறியே விட்டார். நடிகர் மன்சூர் அலி கான் இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருப்பது நமக்கு தெரியும்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மன்சூர் அலி கான் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒருவர் படத்தில் ரேப் காட்சிகளை எப்படி படம் எடுக்கிறார்கள் என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், ரம்யா கிருஷ்ணன், வினிதா என பல ஹீரோயின்களுடன் அதுபோன்ற சீன்களில் நடித்திருக்கிறேன்.. விஜய் படம் ஒன்றில் நடிகை ஸ்வாதியை சேலையை உருவி, அப்படியே பெட்ல தூக்கிப் போடுவேன். இந்த மாதிரி காட்சிகளில் பல டேக் வாங்கும். இப்போது எல்லாம் அப்படி கிடையாது. ரேப் காட்சிகள் எடுக்கும் போது ஹீரோயின்கள் சிரித்து விடுவார்கள். இயக்குனர் வந்த இப்படி பண்ணாதீங்க ஒழுங்கா நடிங்க என கூறுவார்கள் என்று மன்சூர் அலி கான் பேசியுள்ளார்.