நொடிப்பொழுதில் நடக்க இருந்த பயங்கரம்… அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தை… உங்க வீட்டில் குழந்தை இருந்தா கண்டிப்பா இதைப் பாருங்க…!!

கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். அப்படியான ஒரு சம்பவம் ஒரு சின்னச்சிறிய குழந்தைக்கு நடந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்

குழந்தை ஒன்று அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே காம்பவுண்டை ஒட்டி ஒரு பெஞ்ச் இருந்தது. துளியும் ஆபத்தை உணராத அந்தக் குழந்தை பெஞ்சின் மீது ஏறியது. அங்கிருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு காம்பவுண்டில் வெளியே வந்தது. ஒருகட்டத்தில் அந்த கம்பியை பிடித்துக் கொண்டு அந்தரத்தில் குழந்தை தொங்கிக் கொண்டிருந்தது.

இதை அந்த குடியிருப்பு வாசிகள் சிலர் பார்த்தனர். உடனே கீழே ஒரு சேர் போட்டு, அதன் மேல் ஒரு பெண் ஏறி நின்று குழந்தையை காப்பாற்ற லாவகமாக தன் கைகளை விரித்துக் கொண்டு நின்றார். இந்நிலையில் குழந்தையை காணாமல் தேடிவந்த தாய், தன் குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அந்தக் குழந்தையை உடனே கையைப் பிடித்து மேலே இழுத்துத் தூக்கினார். ஒரு நொடியில் அந்த குழந்தை உயிர் தப்பிய நெஞ்சை பத, பதக்க வைக்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. குழந்தை கண்முன்னே தானே விளையாடிக் கொண்டிருக்கிறது என நினைக்காமல் அவர்கள் மேல் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்!..இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *