நிர்வாண வீடியோ எடுத்து 50 லட்சத்திற்கு விற்றார்…! கணவர் மீது கவர்ச்சி நடிகை புகார்…!

எனது நிர்வாண வீடியோவை ரூ 50 லட்சத்திற்கு விற்பனை செய்தார் என முன்னாள் கணவர் மீது பகீர் குற்றச்சாட்டை நடிகை ராக்கி சாவந்த் வைத்துள்ளார்.பாலிவுட் படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி புகழ் பெற்றவர் ராக்கி சாவந்த். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த அடில் கான் துரானி எனும் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தன கணவர் அடில்கான் தன்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார் என ராக்கி புகார் அளித்தார். மேலும் தன் மீது ஆசிட் வீசுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ராக்கி சாவந்தின் கணவர் அடில் கானை மும்பை ஓஷிவோரா போலீஸார் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவர் மீதான புகாரை அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது மயங்கி விழுந்தார் ராக்கி சாவந்த்.

இந்த நிலையில் தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து அடில்கான் பணம் சம்பாதித்தாகவும் ராக்கி புகார் எழுப்பியிருந்தார். இந்த நிலையில் அடில் கான் துரானி மீது மைசூரு வி.வி.புரம் போலீஸ் நிலையத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது கொலை மிரட்டல் விடுப்பதாக ஈரானிய பெண் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கைதான அடில்கான் சில மாதங்களில் விடுதலையானார். இந்த நிலையில் அடில்கான் அளித்த பேட்டியில் ராக்கி சாவந்த்தான் எனக்கு போதை மருந்து கொடுத்து என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார்.

நான் அவரை கொடுமைப்படுத்தவில்லை. என்னிடம் பொய் சொல்லிவிட்டு அவருடைய முதல் கணவருடன் இதுவரை உறவில் இருக்கிறார். அதனால் அவரிடம் விவாகரத்து கேட்டேன். அதற்கு அவரிடம் இருந்த ஆதாரங்களை கொடுத்துவிடுமாறு ராக்கி கூற அடிலும் அவருடைய வீட்டிற்கு சென்றார்.அப்போதுதான் தன்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டினார் என அடில் தெரிவித்துள்ளார். மேலும் ஈரானிய பெண் என்னுடன் 5 ஆண்டுகளாக உறவில் இருந்து வரும் நிலையில் அவரை நான் ஏன் பலாத்காரம் செய்ய போகிறேன். ராக்கியே அந்த பெண்ணுக்கு ரூ 3 லட்சம் கொடுத்து அது போல் பொய் புகாரை கொடுக்கச் சொல்லியுள்ளார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து ராக்கி சாவந்த் கூறுகையில் அடில்கான் எங்களது தேனிலவின் போது என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். குளிக்கும் போதும் அவருடன் படுக்கையில் நெருக்கமாக இருந்த போது வீடியோவாக எடுத்து அதை அரேபியர் ஒருவருக்கு ரூ 50 லட்சத்திற்கு விற்பனை செய்தார். திருமணத்திற்கு முன்பே பெங்களூரில் ஒரு அறையில் அடில்கானின் சகோதரி வரச் சொன்னதாக கூறியதன் பேரில் நான் அங்கு சென்றேன். அப்போது அவர் எனது ஆடைகளை கிழித்து 3 மணி நேரம் என்னிடம் அத்துமீறினார். இதையடுத்துதான் என்னை திருமணம் செய்து கொண்டார் என ராக்கி சாவந்த் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *