தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.மேலும் இவர் ஆரம்ப கட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.ஆனால் அப்போது அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.இதனால் தெலுங்கு பக்கம் சென்ற நடிகை சமந்தாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.இதனால் குறுகிய காலத்திலேயே தெலுங்கு சினிமாவில் அனைத்து டாப் ஹீரோக்களுடன் நடித்து நடிகை சமந்தா பிரபலமானார். இதன் பிறகு மீண்டும் தமிழில் கம் பேக் கொடுத்தார்.மேலும் தமிழில் சூர்யா,விக்ரம்,விஜய்,விஷால்,சிவகார்த்திகேயன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப் பிரபலமானார்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா,கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டார்.இந்நிலையில் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.மேலும் சமீபத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா,சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.இந்நிலையில் சமந்தா காமெடி நடிகர் சந்தானத்துடன் இணைந்து பணியாற்றியது பற்றியும்,நடிகர் சந்தானம் பற்றியும் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.இது குறித்து அவர் கூறும் போத,’
நான் தெலுங்கு சினிமாவில் நடித்தாலும், நான் சென்னையை சேர்ந்த பொண்ணு தான்.அதுவும் என்னுடைய வீடு பல்லாவரத்தில் தான் உள்ளது.அதேபோல் சந்தானம் வீடும் பல்லாவரம்.இதனால் நாங்கள் இருவரும் ஒரே ஏரியா தான். அப்போது சந்தானம் நான் ஸ்கூல் படிக்கும் சமயத்தில் அங்குள்ள ஏரியா பெண்களை நன்கு கவர் செய்து விடுவார்,’என்று கூறியுள்ளார்.மேலும் அவருடன் நடிகை சமந்தா நான் ஈ மற்றும் நீதானே பொன்வசந்தம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.