பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகஉள்ளது.பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம், உதவி இயக்குனராக இருந்த அட்லீ. நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, ஜெய், ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை இயக்கிய இவர், திடீரென நடிகர் ஷாருகானை வைத்து பான் இந்தியா படமான ‘ஜவான்’ படத்தை இயக்கம் உள்ளதாக அறிவித்தார்.
சமீபத்தில் இப்படத்தில் இசை வெளியீட்டுவிழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது.இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பிரியா நன்றி, நாம் ஒரு புது குழந்தையை பெற்றுக்கொள்வோம். நான் இல்லை. நீங்களும் அட்லீயும் சேர்ந்து. தற்போது நாம் நண்பர்களாகிவிட்டோம். நான் கோ ப்ரோடியூசராக சேர்ந்து கொள்கிறேன் என்று ஷாருக்கான் பேசியுள்ளார்.அதேபோல் படத்தின் வெற்றி தோல்வியை பற்றி கவலை இல்லை. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று கூறியுள்ள அட்லீ,
பின்னர் தன்னிடம் ஷாருக்கான் இந்த விழாவுக்கு வர வேண்டுமா? என்று கேட்டதாகவும், ஏன் என நான் கேட்டபோது நான் வேறு மொழி நடிகன் என்னை தமிழ் ரசிகர்களுக்கு தெரியுமா என்பது போல் கேட்டார். அதற்கு நான்.. நீங்கள் வாருங்கள், உங்கள் மீதான அன்பை நாங்கள் காட்டுகிறோம் என்றேன். அதற்கு ஏற்ற போல் ரசிகர்களும் அவர் மீது அன்பை பொழிந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள், மேடையில் ஷாருக்கான் இப்படியா கொச்சையாக பேசுவது என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதை வேற யாராவது சொல்லிருந்தா பொளந்துருப்பானுங்களே… pic.twitter.com/LmDwjKj9Q7
— விமலிசம் (@withkaran) September 1, 2023