பழம்பெரும் நடிகரான முத்துராமன் மகன் கார்த்திக் 1981 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு நவரச திலகம் எனவும் இவர் அழைக்கப்படுகிறார். சுலோச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்ட முத்துராமனுக்கு நான்கு பிள்ளைகள் அதில் ஒருவர் சினிமாவில் நவரச நாயகன் என்ற பட்டத்துடன் வளம் வந்த கார்த்திக் ஆவார். இதையடுத்து பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினர்.
இந்நிலையில் பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நடிகர் முத்துராமன் எந்த தவறான பழக்கமும் இல்லை. நல்ல மனிதர், ஆனால் கார்த்திக் அப்பாவின் பெயரை கெடுத்துவிட்டார். கார்த்திக் தன்னுடன் நடித்த ராதாவுடன் அப்போது கிசுகிசுக்கப்பட்டார். இதையடுத்து கார்த்திக் பல நடிகைகளுடன் உறவில் இருந்தார்.
அவருடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்க்காமல் விடமாட்டார். என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட முத்துராமனுக்கு இப்பேற்பட்ட மகனா என கோலிவுட் சினிமாவே அப்போது இவரை மோசமாக பேசினார். மேலும் அப்போதே அப்பா பெயரை கார்த்திக் குழி தோண்டி புதைத்து விட்டார் என கடுமையாக சாடி இருந்தார் பயில்வான். இதைக் கேட்ட கார்த்திக் ரசிகர்கள் பயில்வானை திட்டி தீர்த்து வருகிறார்கள்