ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஆரம்பித்து காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பிரபலமாகி டாப் ஆங்கராகவும் திகழ்ந்து கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 2014ல் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து நான்கே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றார். அதபின் டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
டிடி இந்த இடத்திற்கு வர அவரது அக்கா பிரியதர்ஷினியும் ஒரு ஆங்கராக பணியாற்றியதும் ஒரு காரணம். சமீபத்தில் பிரியதர்ஷினியுடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ளார். முதன்முறையாக கிளப்புக்கு செல்ல ஆசைப்பட்டு அப்பா அம்மாவிடம் கேட்டேன். அம்மா வேண்டாம் என்று சொன்னார். ஆனால் அப்பா நீ போ என்று கூறி, கிளாமர் டிரஸ் போட்டுக்க அம்மாவுக்கு தெரியாமல் இருக்க மேல ஒரு சட்டை போட்டுக்க என்றும் கூறினார்.
11 மணிக்கு எனக்கு கால் பண்ணா போதும் என்று என்னை கிளப்பில் விட்டார். பார்ட்டிக்கே என்னை அனுப்புறாரு. இன்னிக்கும் என்னை சுற்றி 100 பேர் குடிச்சாலும் எனக்கு குடிக்கனும்னு ஒரு ஆசை வந்ததே இல்லை. ஊத்திக்கூட கொடுக்கலாம் நான் குடிக்க மாட்டேன் என்று டிடி சொல்லியுள்ளார். ஆனால் அங்க போய் சில மணிநேரத்திலேயே அப்பாவுக்கு கால் பண்ணி இங்க இருக்க பிடிக்கல என்று கூறியதாகவும் அதிலிருந்து பார்ட்டியை வெறுப்பதாகவும் கூறியிருக்கிறார் டிடி.