விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. இப்படத்தை தொடர்ந்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்நிலையில், 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆரவ்வை காதலித்து பிரச்சினை ஏற்பட்டது. அதனால் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை வரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியாவின் வெகுளித்தனமும், வெள்ளந்தியான பேச்சும் ரசிகர்களை ஈர்த்தது.
அதன் பின்னர் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்தனர். திரையுலகில் கிடைக்காத புகழும் பிரபலமும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவுக்கு கிடைத்தது. ஒ வியா பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் என்றே கூறலாம்.மேலும், “ஹீரோயின்களைப் பொது இடத்தில் தவறாகத் தொடுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை அவர்களது பெற்றோர்கள் சரியாக வளர்க்கவில்லை என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா, “நான் ஒன்னும் குடிப்பழக்கத்திற்கு அடிமை இல்லை.
சரக்கு எல்லாம் நான் சின்ன வயசுலயே அடிச்சு முடிச்சுட்டேன். எதுவா இருந்தாலும் அதன் எக்ஸ்ட்ரீமையே பார்த்து விடுவேன். இப்போ சரக்கு எல்லாம் போர் அடித்துவிட்டது”. மேலும் அவர் கூறுகையில், “சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு, நிறைய பேரு அப்படி பண்ணுவாங்க. அதெல்லாம் பண்ணியிருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன். அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிதான் பெரிய ஆளாக மாறனும் என்ற ஆசையே இல்லை என்று ஓவியா” கூறியுள்ளார்.