தமிழ் சினிமாவில் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். பள்ளிக்கூட பருவ பெண்ணாக இருந்தாலும் சரி, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தாலும் சரி, இரண்டு கதாபாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் ஐஸ்வர்யா ராஜேஷ்.ஏ.கே.சாஜன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புலிமடா படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார். அவரது நடிப்புக்கு உதாரணமாக காக்கா முட்டை படத்தை சொல்லலாம்.
அந்தப் படம் வெளியானபோதெல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்த புதிது. அப்படிப்பட்ட சமயத்தில் எந்த ஹீரோயினும் இரண்டு மகன்களுக்கு தாயாக நடிக்க யோசிப்பார். ஆனால் ஐஸ்வர்யா அப்படி இல்லை. அதனை துணிந்து செய்தார். அதன் பிறகு பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பட வாய்ப்புகள் கம்மியாகவே அவருக்கு கிடைத்தன.ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்களில் வடசென்னை படம் முக்கியமானது. அதில் தனது நடிப்பின் மூலம் தனுஷுக்கே டஃப் கொடுத்திருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் கடைசியாக ஃபர்ஹானா படத்தில் நடித்தார். அந்தப் படம் சர்ச்சைகளை தாண்டி வெளியானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே கதாநாயகர்களுடன் டூயட் பாடுவதை தாண்டி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் தேடிவரும். அப்படித்தான் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் சமீப காலமாக கதைகள் தேடி வருகின்றன.தன்னை மாடர்னாக அவர் காட்டிக்கொண்டாலும் கிராமத்து கதைகள்தான் அவருக்கு அதிகம் வருகிறது. ஒருபக்கம், தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.