குடும்பத்தில் முற்றிய மோதல்…! சிவகுமாரின் ஜாதி பாசம்…! பழி வாங்கிய ஜோதிகா…! பரபரப்பு தகவல்…!

நடிகை ஜோதிகா மற்றும் சிவகுமார் இடையே மோதல் முற்று இருப்பதாகவும் அதற்கு நடிகை ஜோதிகா பழிவாங்கும் விதமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் இருந்து நடிகர் சிவகுமாருக்கு ஜோதிகாவை பிடிக்காது, தன்னுடைய மகன் சூர்யா ஜோதிகாவை காதலிக்கிறார் என்று தகவல் வெளியான போதே சூர்யாவை கண்டித்தார்.ஆனால் சூர்யா நான் ஜோதிகாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்தார். ஒருமுறை செய்தியாளர் ஒருவர் சிவகுமாரிடம் பேட்டி எடுப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்திருந்தார்.

நடிகை ஜோதிகாவை உங்கள் மகன் காதலிப்பதாகவும், நீங்கள் அதற்கு மறுப்பதாகவும் செய்திகள் வருகிறது. உங்கள் வீட்டில் எல்லோருமே நடிகர்கள். உங்கள் மருமகள் மட்டும் நடிகையாக இருக்க கூடாதா..?என்று கேள்வி எழுப்பினார்.அப்போது என்ன சொல்வது என்றே தெரியாமல் தவிர்த்து விட்டார் நடிகர் சிவகுமார். அதன்பிறகு நடிகை ஜோதிகாவிற்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள், கட்டுப்பாடுகள் விதித்து அதன் பிறகு தான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

திருமணம் முடிவானதும் நான் ஏற்கனவே கமிட் ஆகியிருந்த படங்கள் அட்வான்ஸ் வாங்கிய பணங்கள் அனைத்திலுமே பின்வாங்கி விட்டேன். வாங்கிய அட்வான்ஸ் எல்லாம் திருப்பி கொடுத்து விட்டேன் என்று ஜோதிகா ஒரு பேட்டியில் பேசியிருந்தார். மேலும் ஜோதிகா சூர்யா திருமணத்திற்கு அரை மனதாக ஒப்புக்கொண்ட சிவகுமார் திருமண நாள் அன்று தன்னிடம் கேள்வி எழுப்பிய அந்த குறிப்பிட்ட பத்திரிகையாளரையும் அழைத்திருக்கிறார்.அதனால், அந்த கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரும் திருமணத்திற்கு வந்திருக்கிறார். அவரை பார்த்து இப்போது உங்களுக்கு சந்தோஷமா..?

திருமணம் செய்து வைத்துவிட்டேன் போதுமா..? என்று வேண்டா வெறுப்பாக கேட்டு இருக்கிறார். மட்டுமில்லாமல் விழா மேடையில் ஒன்றில் தன்னுடைய பெரிய பையன் நடிகை திருமணம் செய்து கொண்டான். ஆனால், என்னுடைய சின்ன பையன் நம்முடைய சாதியிலேயே பார்த்து ஒரு நல்ல பெண்ணாக திருமணம் செய்து கொண்டான் என்று பேசியிருந்தார் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிட்டு பேசிய செய்யார் பாலு இப்படியான சாதிப்பற்ற வைத்துக் கொண்டுதான் இவர்கள் ஜெய் பீம் என்ற ஜாதி ஒழிப்பு படத்தை எடுக்கிறார்கள்.

நடிகர் சிவகுமாரை பழிவாங்கும் விதமாகத்தான் தற்பொழுது நடிகர் சூர்யாவை அவருடைய குடும்பத்திலிருந்து பிரித்து மும்பையில் செட்டில் செய்திருக்கிறார் ஜோதிகா. தங்களுடைய குழந்தைகளின் மேல் படிப்புக்காக மும்பைக்கு சென்று இருக்கிறார்கள் என்று அவர்கள் கூறினாலும் கூட மறுபக்கம் மும்பையில் தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தை விரிவுபடுத்தவும் மற்றும் சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத வேறு தொழில்களையும் முதலீடு செய்துள்ளதை கவனிக்கவும் அவர்கள் அங்கே வீடு வாங்கி செட்டில் ஆகி இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *